சனி, மே 11, 2013

கம்பு பருப்பு சாதம்





என்னென்ன தேவை

கம்பரிசி : ஒரு கப்
துவரம்பருப்பு: கால் கப்
பாசி பயிறு : கால் கப்
தண்ணீர் : 3 கப்
மஞ்சள் தூள் : கால் ஸ்பூன்
மிளகாய்தூள் : அரை ஸ்பூன்
நீளமாக நறுக்கிய வெங்காயம் : கால் கப்
நறுக்கிய தக்காளி : அரைகப்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது

தாளிக்க

எண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : அரை ஸ்பூன்

பொடிக்க:

மிளகு : அரை ஸ்பூன்
சீரகம் : அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் : 2
பூண்டு: 4

எப்படி செய்வது
கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
மிளகு, சீரகம் மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்
குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும்
வதங்கியதும் தக்காளி, ம.தூள், மி தூள் அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்
தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசிபருப்பையும்  கொத்தமல்லி தழையும் சேர்த்து 5விசில் வேகவிடவும். தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும்.

குறிப்பு

கம்பரிசி சிறிது குழைய வேக வைப்பது சுவை கூட்டும், பருப்பு வகைகளுடன் தட்டபயிறும் சேர்த்துக்கொள்ளலாம்
மிளகாய் தூள்,மிளகாய் வற்றல், மிளகு போன்றவை சேர்ப்பதால் காரம் எவ்வளவு தேவையோ அதற்கேற்ப பிரித்துகொள்ளவும்

1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான சத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திறகு வாழ்த்துகள்...

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?